
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(19). அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தன்னுடன் சமூகவலைதளம் மூலம் நட்பாகப் பழகி வந்த, சென்னையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியை, அவரது பெற்றோருக்குத் தெரியாமல் சந்தோஷ் அழைத்துச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்