
டிஜிபி உள்பட போலீஸாருக்கு சவால் விட்டு தலைமறைவாக இருந்த பிரபல நெல்லை ரவுடி சென்னையில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகே பங்களா சுரண்டை, வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி அருள்ராஜ் (47). இவர் மீது பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சுரண்டை, குரும்பூர், வடக்கு தூத்துக்குடி, எப்போதும் வென்றான், தாடிகொம்பு, கரூர், எழும்பூர், விருகம்பாக்கம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்