
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்வதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இம்மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ள நிலையில், மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் மட்டும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் அதிகபட்சமாக நேற்று63 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.சிற்றாறு ஒன்றில் 13 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. புத்தனாறு, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்