
ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு ‘ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க அணை’ கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, அணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங் கள் கையகப்படுத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்