
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்க இருப்ப தால் கர்ப்பிணிகள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசிகள் 30 நாட்கள் கழித்தும், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 85 நாட்களுக்கு பிறகும் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தியதால் தடுப்பூசி மீது இருந்த அச்சத்தை மறந்த பொதுமக்கள் தாமாக முன் வந்து தற்போது தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்