
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டு யானை, வனத் துறையினரால் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் முகாமில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, பின்னர் பாகன்களின் கட்டளைகளுக்கு இணங்கியது. இந்த யானைக்கு வனத்துறையினர் சங்கர் என பெயரிட்டனர்.
இந்நிலையில், 141 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர், கூண்டிலிருந்து நேற்று யானை வெளியே அழைத்து வரப்பட்டது.முன்னதாக, புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல், துணை இயக்குநர் காந்த்மற்றும் வனத் துறையினர் முன்னிலையில் பூஜை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்