
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகேதாட்டு அணைக்கு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரியில் போராட்டத்தினர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நேற்று மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிராக போராட்டஙகளில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்