
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தொழில் செய்ய கடன் வேண்டும் என்றும் மனு அளித்த இரண்டு நாட்களில் பெண் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வழங்கினார்.
கடந்த ஜூலை 9-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த ரமணி என்பவர் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், ஏற்கெனவே தையல் தொழில் செய்து வருவதாகவும், வருமானம் போதாததால், தொழிலை மேம்படுத்த கடனுதவி அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்