
வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுபணம் பறிக்கும் மோசடியில் மர்மநபர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு காவல் அதிகாரிகள், காவலர்கள் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி மோசடி நடந்தது. முகநூலில் அவர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கும் மர்ம நபர்கள், அவசரத்தேவைக்காக பணம் தேவைப்படுவதாக அதில் பதிவிட்டு, பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்