
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வானகரம் பள்ளிக்குப்பம் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்து மீன் சந்தை அமைப்பதற்காக, விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் கட்டிடக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இது, கூவம் ஆற்று நீர் சீராக செல்ல தடையாக உள்ளது. ஏற்கெனவே கூவம் ஆறு மாசுபட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் இருந்து ஆற்றில் கழிவுநீர் கலந்து மேலும் மாசுபடுத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்