
தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துநகை, பணத்தை கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மோகன் வடிவேல். இவர் கடந்த மாதம் 21-ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தபோது தனது வீட்டிலிருந்த 3 பவுன் நகை மற்றும்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையன் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார்என்பவரும் புகார் அளித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்