
தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது, குடியிருப்பில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், இந்தக் கட்டிடங்களின் ஸ்திரத் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, இவ்விவகாரத்தில் குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்