Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701390.jpgடாக்டர் சுப்பையா கொலை வழக்கு கடந்து வந்த பாதை

சொத்துக்காக நடந்த பிரச்னையில் டாக்டர் சுப்பையா கடந்த 2012-ம்ஆண்டு எதிர்தரப்பினர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்க ஆத்திரமடைந்த பொன்னுசாமி தரப்பு கூலிப்படையை வைத்துகச்சிதமாக கொலையும் செய்துள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிப்பதிவுகள், கொலையில் ஈடுபட்ட ஐயப்பன் அரசு தரப்பு சாட்சியாக மாறியது இந்த வழக்கின் முக்கிய திருப்பங்கள்.

இந்த வழக்கில் அபிராமபுரம் போலீஸார் கடந்த 2015-ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதிஅறிக்கையை தாக்கல் செய்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. டாக்டர் சுப்பையாவின் உறவினர்கள் தமிழக அரசின் உயர் பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர் என்றாலும் வழக்கு விசாரணை கடை 6 ஆண்டுகளாக நீடித்து வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கில் கடந்தாண்டு உயர் நீதிமன்றம் தலையிட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டபிறகே விசாரணைசூடுபிடித்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி நேற்று குறிப்பிடத்தக்க தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...