
கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்துக்குள்அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் படிப்படியாக குறைந்த கரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்