
கூடுதல் வட்டி தருவதாக ஆயிரக்கணக்கானோரிடம் தனியார் நிதி நிறுவனம் ஒன்று ரூ.3.5 கோடி மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனத் தலைவர், இயக்குநர்கள் மீது புதுச்சேரி சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுச்சேரி, முதலியார்பேட்டை ஜான்சி நகர் 2-வது குறுக்குத் தெருவில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்நிறுவனத்தின் கிளையானது டெபாசிட் பணத்துக்கு கூடுதல் வட்டி, குறுகிய கால தவணை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தது. இதை நம்பி தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த பலர் மாதந்தோறும் ஆயிரம் முதல் லட்சம் வரை பணத்தை செலுத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்