
திருப்பூரில் போலீஸ் எனக்கூறி, அரிசி ஆலை அதிபரின் மகனைக் கடத்தி ரூ.3 கோடியை மர்மநபர்கள் பறித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, காடையூரில் அரிசி ஆலை, திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சிவபிரதீப்(22). கடந்த 22-ம் தேதி அரிசி ஆலைக்கு வந்த சிவபிரதீப், மதியம் உணவுக்காக காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்