
மதுரை அருகே ஒத்தக்கடை- திருவாதவூர் சாலையில் புது தாமரைப்பட்டியை அடுத்துள்ளது இலங்கிப்பட்டி. இங்கு சாலையோரம் சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதை வாழவந்தான் அம்மன் கோயில் என அழைக்கின்றனர். இக்கோயில் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இலங்கியேந்தல் கண்மாய் மறுகால் பாயும் இடத்தை ஒட்டியுள்ளகாலியிடத்தில் வாழவந்தான் அம்மன் கோயில் அருகே புதிதாக மற்றொரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வாழவந்தான் அம்மன் சிலையும் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பொதுப்பணித் துறை கண்மாய் இடத்தை கண்ணன் என்பவருடைய தரப்பினர் ஆக்கிரமித்து கோயில் கட்டி
யிருப்பதாகவும், அதை அகற்றஉத்தரவிடக் கோரி அருண்குமார்என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற 3.8.2020-ல் உத்தரவிட்டதை அடுத்து கோயிலை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் தந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்