
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் அடைக் கப்பட்டுள்ள நிலையில், கட்டுப் பாடுகளை மீறி சுற்றுலாப் பயணிகள் குவிவது கரோனா பரவலுக்கு வழிவகை செய்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் 3-வது அலையைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப் பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்