
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் ‘டிராகன்’ பழ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.
இண்டூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிஓய்வு பெற்றவர் கோபாலக்கண்ணன். விவசாயத்தின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். பணி ஓய்வுக்குப் பின்னர் தீவிர ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இண்டூர் அருகிலுள்ள இ.கே.புதூர் கிராமத்தில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. இங்கு தென்னை, சப்போட்டா, பப்பாளி, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறார். இதற்கிடையில், ‘டிராகன்’ பழத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 4 செடிகளில் தொடங்கிய சாகுபடியை தற்போது100 செடிகளாக விரிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் ஆசிரியர் கோபாலக்கண்ணன் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்