
இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், அந்த குழந்தைக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் 26-ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 3-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்