
வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெறுவதற்கு பொதுமக்கள் போராட வேண்டி உள்ளது. அதிகாரிகள் இன்னும் திருந்தாமல் பணம் பெறுவதிலேயே குறியாக இருப்பதாக காஞ்சி, செங்கை எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று மறைமலை நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்