
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்ததிட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்பினருக்கு தெரிந்ததா என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் சோதனைநடத்தினர். கோவையில் வேலுமணி வீட்டில்சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் வீட்டு முன்பு குவிந்துவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்