
தமிழகத்தில் கோவை, புதுக் கோட்டை, கரூர், திருவண்ணா மலை மாவட்ட அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 12 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகிஉள்ளது.
கரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ம் தேதி கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி திறக்கப்பட் டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாண வர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்