
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து வார்டன் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு 1977-ல் உருவாக்கப்பட்டது. சென்னையில் 145 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில், போக்குவரத்து சாலை சந்திப்புகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்