
கரோனா தாக்கத்தால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், வீட்டில் உள்ள சிறுவர்களையும் வேலைக்கு அனுமதிக்கும் பெற்றோர்களால் குழந்தை தொழிலாளர் அதிகரித்து வருகின்றனர். இதை சில சிறுதொழில் வணிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுவர்களின் உழைப்பைஉறிஞ்சி வருகின்றனர்.
கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதில் குடும்ப வறுமை காரணமாக சில மாணவர்கள் விவசாயப் பணி, தச்சுத்தொழில், ஓட்டல்களில் துப்புரவு, தையல் தொழில், மளிகைக் கடை மற்றும் வாகன பழுது நீக்கும் கடை என பல்வேறு வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்