
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என வலியுறுத்தி விநாயகர் சிலையை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற இந்து மக்கள் கட்சியினரிடம் இருந்து சிலைகளை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளன. கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது, விஜர்சன ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்