
“வரலாற்று அடையாளத்துக்கு நல்லது என்பதால், தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி இருப்பதில் தவறில்லை” என தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற வஉசி 150-வது பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது: தற்போதைய சூழ்நிலையில் தியாகிகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வஉசியின் வீடு எங்கே இருக்கிறது, அவர் இழுத்த செக்கு எங்கே இருக்கிறது, அவர் நடத்திய கப்பல் கம்பெனி எங்கே இருந்தது எனத் தெரியாதவர்கள் கூட தற்போது தேடித், தேடி மரியாதை செலுத்துகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்