
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்ஸ் ராணாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 29 நீதிபதிகள் கொண்ட குழு பார்வையிட்டது. அப்போது, கடற்படையின் செயல்பாடுகள் குறித்து கடற்படை அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் 29 நீதிபதிகள் நேற்று முன்தினம் இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்ஸ் ராணாவை நேரில் சென்று பார்வையிட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனித் சதா அவர்களை கப்பலுக்குள் வரவேற்றார். தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளிடம் கடற்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்