
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா ஒரு 24 மணி நேர தடுப்பூசி மையங்களை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில்,அடையாறு மண்டலம், வெங்கட்ரத்னம் நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் கரோனா தடுப்பூசி மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.அதைத்தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக தலா ரூ.6 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்