
எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையில் உள்ள மயானம் அருகே வேலி காட்டுக்குள் கடந்த 15-ம்தேதி மேலஈரால் கம்மவார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன்(28) என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இதுதொடர்பாக மாசார்பட்டி காவல் ஆய்வாளர் கோகிலா தலைமையில், உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில், முருகன் கொலை செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் முருகன் (24) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்