
தமிழகத்தில் அண்மை காலமாக குற்றச்செயல்கள் அதிகரிக்கத் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கொலை உட்பட அனைத்து வகையான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்கும் வகையில் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் அனைத்து மாவட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டனர்.
பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட ரவுடிகளை கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் களம் இறங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்