
தமிழகத்தில் அக்டோபரில் நடக்கஉள்ள ஊரக உள்ளாட்சி தேர்த லுக்காக 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த13-ம் தேதி அறிவித்தது. அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்