
தமிழ்நாடு மாநில மூலிகைத் தாவர வாரியம் சார்பில் 75-வது ஆண்டுசுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், சென்னை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் ‘மக்களைத்தேடி இந்திய மருத்துவத் திட்டம்’ தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற் றது.
இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதித் துறை இயக்குநர்எஸ்.கணேஷ், இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் நோயாளிகளுக்கு நிலவேம்பு, வசம்பு, வெற்றிலை, ஆடாதொடை உட்பட 20-க்கும் மேற்பட்ட மூலிகைத்தாவர கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்