
காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவ நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பாரம்பரியம் மிக்க பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை சின்னையங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கிருபாகரன், கிருபானந்தன். இவர்கள் இருவரும் சிவ வழிபாட்டில் தீவிரமாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தவாறு பள்ளிக்கு வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்