
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரூ.234.37 கோடியில் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பெருங்களத்தூரில் ரயில்வே கேட் எண் 32-க்கு மாற்றாக ரூ.234 கோடியே 37 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக ரயில்வே துறை சார்பில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் பகுதியை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. அந்த பணிகள் முடிந்துவிட்டன. கடந்த ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்