
காஞ்சிபுரத்தில் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சென்னை புறநகர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் உள்ள சிறிய அளவிலான தடுப்பணைகள் நிரம்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. எனினும், ஆற்றுப்படுகை முழுவதும் தண்ணீர் செல்லவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்