
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்வாங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடலில் உருவான சூறாவளிக் காற்றால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் நேற்று பலத்த காற்று வீசியது. இதில் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. முகுந்தராயர் சத்திரம் மீன் இறங்குதளம் மீது 15 அடி உயர ராட்சத அலைகள் மோதின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்