
ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஏஆர்) ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவர்) படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பான எம்.வி.எஸ்சி.யில் சேர தேசிய அளவில் தேர்வு நடத்துகிறது. இத்தேர்வு செப்.17-ல் நடந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா, தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தார். இவர், திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்சி. படித்தவர் ஆவார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்