
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையைக் கடந்து வெள்ளம் பாய்ந்துஓடியதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் செல்லாத வகையில் நீர்வள ஆதாரத் துறை சார்பில்,சுமார் 300 மீட்டர் தூரம் வரதராஜபுரம் பகுதியில், மணல் மூட்டைகளைக் கொண்டு அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிநடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணி தொடர்பாக காஞ்சிஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்