
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக் கழகம்சார்பில் தஞ்சாவூரில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இந்திய உணவுக் கழகம் தஞ்சாவூரில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் நிர்மலா நகரில் உள்ள இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 2,500 சதுரஅடி பரப்பளவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்