
டெல்லி விக்யான் பவனில் தேசிய சட்டச் சேவை ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் மத்தியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:
நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. மக்களுக்கு சேவை வழங்கும் கட்டமைப்பின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும் தேவையானவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் சட்ட உதவிகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்பும் மக்களும் நீதி கிடைப்பதில் அடிக்கடி சவால்களை சந்தித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்