
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோன்று, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களிலும் நேற்று விழா தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும். நடப்பாண்டுக்கான நிகழ்வு, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்