
திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் யுவராஜ்(29). இவரும் அய்யந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். பெண்ணின் குடும்பத்தாரிடம் முறைப்படி யுவராஜ் பெண் கேட்டபோது, திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த 9-ம் தேதி சிங்கவரம் ரங்கநாதர் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்