
சென்னை: சென்னையில் மனோகர் என்பவரின் மளிகை மொத்த வியாபாரக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மல்லிப் பொடித் தூளில் ரசாயனக் கலவை அதிகமாக கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிஉணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2015-ம் ஆண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதை எதிர்த்து மனோகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், “உணவு பாதுகாப்புத் துறைதாக்கல் செய்துள்ள அறிக்கையில் சென்னை மாநகர எல்லையைப் பொறுத்தமட்டில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 580 புகார்கள் ஆய்வில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்