
தமிழகத்தில் 6-ம் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் ஜன.3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி வழக்கம் போல இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் டிச.31, ஜன.1-ம் தேதிகளில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், வரும்15-ம் தேதி (நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்