
மேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2022-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த விழா நேற்று முன்தினம் அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கியது. கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்