
திருவள்ளூர் அருகே வெந்நீர் பட்டு படுகாயம் அடைந்த 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பனின் 3 வயது பெண் குழந்தை நித்யஸ்ரீ. கடந்த மாதம் 2-ம் தேதி வீட்டில் இருந்த வெந்நீர் பாத்திரம், நித்யஸ்ரீ மீது தவறி விழுந்து விட்டது. இதில், குழந்தைக்கு வலது காலில் இருந்து வயிற்றுப் பகுதி வரை வெந்து புண்ணாகி விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்