
கோவை: சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு சென்று வர ஈரோடு -கோவை - பாலக்காடு வழித்தடம்முக்கியமானதாகும். சேலத்தில்தொடங்கி, ஈரோடு - கோவை -பாலக்காடு - திருச்சூர் வழியாக கொச்சியில் முடியும் தேசிய நெடுஞ்சாலை (எண் 544) வழித்தடத்தில் தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், பொது மற்றும் தனிப்போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்