
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளி விடுதியில் அறைகளை சுத்தம் செய்யக் கூறியதாக மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் உடலைப் பெற பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஒரு மாணவி, பள்ளி அருகே அவர் தங்கியுள்ள விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறி விஷம்குடித்தார். பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன்இன்றி கடந்த 19-ம் தேதி உயிர்இழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்