
தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக திருவையாறில் தியாகராஜரின் 175-வதுஆண்டு ஆராதனை விழா, ஒருநாள் மட்டுமே நடைபெறும், விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தியாக பிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 175-ம் ஆண்டு ஆராதனைவிழாவை ஜன.18 முதல் 22-ம்தேதி வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்செய்து வந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான ஜன.22-ம் தேதி ஒருநாள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்